உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனித வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத பொருளாக ஸ்மார்ட் போன்கள் மாறி வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடு போதைப்பழக்கத்தை போன்று ஆபத்தானது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெர்மன் பேராசிரியர்கள் 48 பேரின் மூளை எம்ஆர்ஐ ஸ்கேன்களை ஒப்பிட்டனர். அவர்களில் 22 பேர் தொலை பேசிகளுக்கு அடிமையாகி இருந்தது தெரியவந்தது. ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் மூளை அளவு மற்றும் அடத்தியில் மாற்றம் காணப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் போதைப்பொருள் மற்றும் போதை பழக்கத்தால் பாதிக்கப்படுபவர்களிடையே காணப்படுவதைப்போல மூளையின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.